உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நரேந்திர மோடி “ஜிகாதி” பயங்கரவாதம் தொடர்பில் பேச்சு நடத்துவார்.

இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்யும்போது ஜிகாதி பயங்கரவாதம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜிகாத் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது மற்றும் பிராந்தியத்தில் இருந்து அதனை முற்றாக ஒழிப்பது போன்ற விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் மோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார்.

இந்தநிலையில் மோடியின் வருகை இலங்கையில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டும் உதாரணமாக இருக்கும் என்று இலங்கை தெரிவிக்கிறது.

கருத்து தெரிவிக்க