உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சங்ரிலா தற்கொலைதாரி மீது மீண்டும் குற்றச்சாட்டு

சங்ரிலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்தியவரே 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான இரும்பு மற்றும் அலுமீனியப் பொருட்களை திருடிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்று நீதிமன்றி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் இதனை இன்று தெரிவித்தனர்.

இன்ஸாப் அஹ்மட் என்ற இந்த சந்தேகநபர் தெமட்டகொடயை வசிப்பிடமாக கொண்டவர். இவருக்கு வெல்லம்பிட்டியவில் செப்பு தொழிற்சாலை ஒன்றும் இருந்தது.

இந்தநிலையில் 2013ஆம் ஆண்டு மே 30ஆம் திகதியன்று கொள்கலன் ஒன்றில் இருந்து இந்தப்பொருட்கள் திருடப்பட்டன.

கருத்து தெரிவிக்க