உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கையில் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய விசாரணையாளர்கள்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது ஆதரவை வழங்கிவருகிறது.

இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலியாவி;ன் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே 20 பேரைக்கொண்;ட குழு ஒன்று விசாரணைகளை மேற்கொள்ளும் இலங்கையின் புலனாய்வாளர்களுக்கு உதவும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக்குழு குறிப்பாக இரசாயனப்பகுப்பாய்வு விடயங்களில் இலங்கைக்கு உதவுகிறது.

இதேவேளை வெளிநாட்டு பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க