உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

8 முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலகல் கடிதங்களை கையளித்தனர்.

கபீர் ஹாசிமை தவிர்ந்த ஏனைய 8 முஸ்லிம் அமைச்சர்கள் இன்று மாலை தமது பதவிவிலகல் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளனர்.

கபீர் ஹாசிம் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருப்பதால் தமது பதவிவிலகல் கடிதத்தை கையளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரவூப் ஹக்கீம், எம்எச்ஏ ஹலீம், ரிசாத் பதியுதீன், ராஜாங்க அமைச்சர்கள் பைசல் காசிம், எச்எம்எம் ஹரீஸ், அமீர் அலி, அலி ஷாகிர் மௌலானா, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரே தமது கடிதங்களை கையளித்துள்ளனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து இவர்கள் கடந்த திங்கட்கிழமை பதவி விலகுவதென்று முடிவெடுத்தனர்.

கருத்து தெரிவிக்க