உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி சந்தியில் விபத்து -ஒருவர் பலி-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த இன்றைய தினம் வியாழக்கிழமை(6) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது-25) என்பவர் என்று தெரியவந்துள்ளது.
மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில்  நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர் மன்னார் பொது வைத்தியசாலையின்  அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க