உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா-ஓமந்தை பாடசாலை ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஓமந்தை மகாவித்தியிலயத்தின் அதிபர் ஆசிரியை ஒருவரை தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தை மகாவித்தியாலயத்தில் இன்று அதிபர் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார்.
இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தை பிரயோகத்தை சற்றும் எதிர்பாராத ஆசிரியை மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஆசிரியையை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் குறித்த பாடசாலையின் அதிபர் மீது சிலர் தாக்குதலை தேற்கொண்டுள்ளனர் என்தெரியவருகின்றது.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,”எமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றுபவர்களில் ஒரு பெண் உப அதிபரிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்கு தெரியும். இதனால் அதனை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் இரண்டாம் ஆண்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து உப அதிபரின் மகன்மார் பாடசாலைக்குள் வந்து முரண்பட்டனர். எனது மேசையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்தனர். அங்கிருந்த  ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தக்கூடாது என அச்சுறுத்தினர். தமது தாய்க்கு மேல் மாடியில் சென்று கற்பிக்க முடியாது எனவே அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். பின்னர் நாம் பொலிஸாருக்கு முறையிட்டதை அடுத்து பாடசாலைக்கு பொலிஸாரும் மற்றும் இராணுவ அதிகாரிகள் வருகை தந்து விசாரித்தனர். பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளேன்”
என தெரிவித்த அதிபர் தனக்கு எவரும் தாக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க