உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது

அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2018 ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஆராய்வற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வறிக்கையில் சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்கள், பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை விமான நிறுவனம், விவசாய அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைப்பாடுகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க