உள்நாட்டு செய்திகள்

சிங்கள பௌத்த தேசியவாதமே தமிழ் பேசும் மக்களின் எதிரி-கஜேந்திரகுமார்

சிங்கள பௌத்த தேசியவாதமே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பொதுவான எதிரி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்வதன் மூலம் ஒரு பலமான சக்தியாக உருவாக முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம். அதனை இன்றைய சம்பவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.

முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விாிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீா்க்கப்படவேண்டியவையும், தீா்க்ககூடியவையும் கூட ஆகவே அது தொடா்பாக நாங்கள் சிந்திக்கவேண்டும்.

மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிாித்தா ழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்ககூடாது.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணா்வை வெளிப்படுத்தவில்லை.

இதனை முஸ்லிம் மக்களும், தலைவா்களும் புாிந்து கொள்ளவேண்டும். மேலும் தமிழா்களின் உாிமைசாா் போராட்டத்தை முஸ்லிம் தலைவா்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தாா்கள்.

இன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவா்களிடம் மனமாற்றம் நிச்சயமாகதேவை.

சிங்கள பௌத்த தேசியவாதமே இருவருக்கும் பொதுவான எதிாி என்பதை உணா்ந்து கொள்ள முடியும். அதனை உணா்ந்து கொள்ளாமல் தொடா்ந்தும் முஸ்லிம்களும், தமிழா்களும் சண்டையிடுவது அடிமுட்டாள்தனமான செயல். அதன் ஊடாக சிங்கள பௌத்த தேசியவாதம் வளா்ந்து ஒரு கட்டத்தில் அது தமிழ்தேசத்தையும் அழிக்கும், முஸ்லிம்களின் தேசத்தையும் அழிக்கும் என்றாா்.

கருத்து தெரிவிக்க