வடக்கு செய்திகள்

இந்து கற்கைகள் பீடத்திற்கு இந்தியாவினால் புத்தகங்கள் பரிசளிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்திற்கு இந்து கற்கைகள் சார்ந்த புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியிலான மேற்படி புத்தகங்கள் இந்திய தூதரகத்தின் துணை தூதர் பாலச்சந்திரனால் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கந்தசாமி, பேராசிரியர் சுகந்தினி சிறிமுரளீதரன், பேராசிரியர் சுதாகர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் பத்மநாத சர்மா ஆகியோர் இப்புதிய புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது புத்தகங்கள் வழங்கப்பட்டமைக்கு பல்கலைக்கழகத்தினால் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு புதிய இந்து கற்கை பீடத்தை கட்டியெழுப்ப தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கருத்து தெரிவிக்க