இலங்கை கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு பொறிமுறைமைகளை பயன்படுத்த வேண்டும் என பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் அபிவிருத்தி என்ற தொனிப் பொருளில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அவுஸ்ரேலியா உள்ளிட்ட சில நாடுகள் கிரிக்கெட் துறைக்கு செயற்கை நுண்ணறிவு பொறிமுறைமைகளை பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பொறிமுறைமைகளை பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்துள்ள பின்னடைவை நிவர்த்திக்க முடியும் எனவும் தம்மிக்க பெரேரா நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்து தெரிவிக்க