உள்நாட்டு செய்திகள்புதியவை

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை முன்னிலையாகுமாறு, தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளின் போது சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுதல் உற்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்னர் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விஷேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க