உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – இரண்டு பாதுகாப்பு உயரதிகாரிகளிடம் வாக்குமூலம்

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பாதுகாப்பு உயரதிகாரிகளிடம் நாளை வியாழக்கிழமை வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நாடாளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா நேற்றைய தினம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தார்.

கருத்து தெரிவிக்க