வெளிநாட்டு செய்திகள்

தாய்லாந்து பிரதமரைத் தீர்மானிக்கும் தேர்தல் இன்று

தாய்லாந்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 500 பேரும் செனட் சபையின் 250 உறுப்பினர்களும் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததையடுத்து இன்றைய நாடாளுமன்ற வாக்களிப்பு இடம்பெறுகிறது.

பிரதமர் பிராயுத் சான் ஓ ச்சா (Prayut Chan-o-Cha) மீண்டும் அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ ஆதரவு பெற்ற அவரது பலாங் பிரசாரத் கட்சி, அரசாங்கம் அமைக்கத் தேவைப்படும் 376 இடங்களைப் பெறுவதற்கு கூட்டணி வாய்ப்புகளை நாடியுள்ளது.

இதேவேளை, இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணியைச் சேர்ந்த திரு. தனாதொர்ன்னும் (Thanathorn Juangroongruangkit) பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரது கட்சி பொதுத் தேர்தலில் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

கருத்து தெரிவிக்க