உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நாடு கடத்தவேண்டாம். இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையில் அதிக காலம் தங்கியிருந்தமை காரணமாக கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானிய குடும்பத்தை நாடு கடத்தவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 முதல் 57 வயதுகளை கொண்ட பாகிஸ்தானிய கிறிஸ்தவ குடும்பம் ஒன்று அடைக்கலம் கோரி இலங்கைக்கு வந்திருந்தது.

எனினும் அந்தக்குடும்பத்தை நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் அவர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டால் பாகிஸ்தானில் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை எச்சரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க