உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் இடங்களை புதியவர்களைக் கொண்டு நிரப்பாதிருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார்.

அரசாங்க தரப்பு செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.

இதன்படி கபீர் ஹாசி;ம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களின் இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.

இதற்கு பதிலாக குறித்த அமைச்சுக்களை அமைச்சுக்களின் செயலாளர்கள் வழிநடத்துவர்.
இதற்கான கண்காணிப்பை பிரதமர் காரியாலயம் மேற்கொள்ளும்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கொள்கைத்தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க