வெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 45 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவமல்ல எனவும் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க