இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்திற்கருகாமையில் இனம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். உயிரிழந்த நபர் 60 வயது தொடக்கம் 65 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் அதற்கான மேலதிக விசாரணைகளை முன்னொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க