வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் கார்குண்டு தாக்குதல்-19 பேர் உயிரிழப்பு

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அசாஸ் நகர சந்தை பகுதியில் கார்குண்டு வெடித்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நம்பப்படும் இப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு அருகே உள்ள மசூதியில் தொழுகை முடிந்து, மக்கள் வெளியேறி கொண்டிருந்த சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியதாக அப்பகுதியில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலினால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. குண்டுவெடிப்பில் சிக்கி 4 சிறுவர்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை.

கருத்து தெரிவிக்க