அழகு / ஆரோக்கியம்

இயற்கை முறையில் உதட்டழகு பெற….

பெண்களின் வசீகரத்தைக் கூட்டுவதில் உதடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. எவ்வளவு அழகானவர்களாக இருந்த போதிலும், சிலருக்கு உதடுகளின் கருமை நிறம் பெருங்கவலை அளிக்கிறது. சில எளிய இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், உதடுகள் மென்மையுற்று சிவப்பழகு பெற்றுவிடும்.

1. சிறுதுண்டு பீற்றூட்டை அரைத்துச் சாறு பிழிந்து அதனை தினமும் இரவில் உதடுகளில் பூசி வரலாம். அதேபோன்று புதினா இலைச்சாறு அல்லது மாதுளம் பழச்சாறையும் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும்.

2 . உதடுகள் கருமை அடைவதற்கு வறட்சியும் ஒரு காரணம். வெண்ணெயை தொடர்ந்து உதட்டில் தடவி வர வறட்சி நீங்கி நிறம் மாறும்.

3 . கருமையைப் போக்குவதில் தயிரும் ஒரு சிறந்த பொருள். தயிரை உதட்டில் தடவி மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர சிறந்த பலனைக் காணலாம்.

கருத்து தெரிவிக்க