உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் போனோர் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களது உறவினர்கள் இன்று போராடடத்தில் ஈடுபட்டனர்.


யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கடசி அலுவலகத்துக்கு வவுனியாவில் இருந்து வந்த சிலரே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடடவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; கலந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.

மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.


இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.

இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

கருத்து தெரிவிக்க