உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

ரத்தன தேரருக்கு ஆதரவு வலுக்கிறது !

உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு வலுத்து வருகின்றது.

ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகியோரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார் ரத்தன தேரர்.

தலதாமாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்துக்கு பௌத்த அமைப்புகள் ஆதரவு வெளியிட்டுள்ளதுடன், ரத்தன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில் ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து கத்தோலிக்கர் ஒருவரும் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

அரசியல் பிரமுகர்களும், தேரர்களும் தலதாமாளிகை நோக்கி படையெடுத்த வண்ணமுள்ளனர். நேற்றிரவும் தேரரை சந்தித்து கலந்துரையாடுவதற்காக முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்தனர் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க