புதியவைவெளிநாட்டு செய்திகள்

மாணவனுக்கு புல்லை உட்கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய ஆசிரியர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் பாடம் படிக்காத மாணவர் ஒருவரை புல் பூண்டுகளை உட்கொள்ள செய்த ஆசிரியர் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முன்பள்ளி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றித்த சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார்.

ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை உட்கொள்ளவைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க