உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ராகுல் காந்தி மௌனம். தொண்டர்கள் தொடர்ந்தும் வலியுறுத்து

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவது பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

இதனையடுத்து தொண்டர்கள் சிலர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2014, 2019 என தொடர்ந்து 2 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதற்கான 10 சதவீத இடங்களைக்கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு அந்தக்கட்சி தள்ளப்பட்டது.

இந்த மோசமானதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.
எனினும் காங்கிரஸ் கட்சி அதனை ஏற்கவில்லை.

இதனையடு;த்து டெல்லியின் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் ஜாட்டன், தொண்டர்களுடன் ராகுல் காந்தி வீட்டு முன்பாக நேற்று திடீர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.

கருத்து தெரிவிக்க