உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட நிதியமைச்சின் தகவல் பணிப்பாளர் விடுவிக்கப்பட்டார்

93 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டதாக கூறப்பட்ட நிதியமைச்சின் தகவல் பணிப்பாளர் காவல்துறை விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதன் பின்னர் மொஹமட் அலி ஹசன் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவி;த்துள்ளார்.

ஹசன் இன்று காலை மல்வானை பகுதியி;ல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க