உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுற்றிவளைப்பு தேடுதலில் மேலும் 27 பேர் கைதாம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது 27 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மினுவங்கொடை, கல்ஒலுவை ஆகிய பிரதேசங்களில் இருந்து 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரத்டுவை பகுதியிலிருந்து 3 போ, ஹெவலொக் சிட்டியில் 2 பேர், குருணாகல் மற்றும் வெலிசர மாபோல பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க