உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொலிஸ் அதிகாரியை கீறியதால் பெண் சட்டத்தரணி கைது! – கொழும்பு உயர்நீதிமன்றில் சம்பவம்

கொழும்பு உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த பெண் சட்டத்தரணி நடந்து கொண்டதாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, வாசலில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இந்த பெண் சட்டத்தரணி ஆவேசப்பட்டு அந்த அதிகாரியின் கைகளை கீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க