உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காலி மற்றும் வெலிக்கடை பகுதியில் வைத்து 3 வெளிநாட்டவர்கள் கைது

காலி மற்றும் வெலிக்கடை பகுதியில் வெளிநாட்டவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கொன்றில் பிடிவிராந்து வழங்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 30 வயதுடைய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காலி பாலத்திற்கு அருகில் சேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளினால், குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியுள்ள 45 வயதான நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க