உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலைக்கு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளவிருந்த நபரின் சகோதரன் வெடிப்பொருட்களுடன் சிக்கினார்

பதுரலிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு கைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரின் சகோதரனிடம் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர கூறுகையில், இராணுவமும், விமானப்படையும் இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க