உள்நாட்டு செய்திகள்புதியவை

சிலாபத்தில் மௌலவி கைது

சிலாபத்தில் அரபு மொழி கற்பிப்பதாகக் கூறப்படும் நிலையமொன்றில் பணியாற்றி வந்த மௌலவியொருவர் இராணுவத்தினரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்,  ஜயபிம என்ற பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி விடிவிலான அரேபிய மொழி பொதிக்கப்பட்ட புகைப்படங்கள் 3, 70 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பெரும் எண்ணிக்கையிலான அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர்  ஒருவரை (48) வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை, திமுதுகமையில் வைத்து கைது செய்யப்பட்ட இந்நபரிடமிருந்து 51 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை, நுகத்தலாவை பகுதியில் இராணுவ சீருடைக்கு ஒத்ததான இரண்டு சீருடைகளுடன் சந்தேக நபர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க