உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது. 2006 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் 2018 பெப்ரவரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க