உள்நாட்டு செய்திகள்புதியவை

ஓய்வுபெறுகிறார் விமானப்படைத் தளபதி

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நாளை மறுதினம் 29 ஆம் திகதியுடன் பதவிநிலை ஓய்வுபெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் நியமிக்கப்படலாம் என படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரை நியமிப்பதற்கான பரிந்துரையை தற்போதைய விமானப்படைத் தளபதி வழங்கியுள்ளார்.
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பதவிக்கு நியமனம் பெற்றார். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படையில் சேவையாற்றுவதுடன் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க