உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை-அமரிக்க உடன்படிக்கையால் இறைமைக்கு பாதிப்பில்லை- அமரிக்க தூதுவர்

இலங்கைக்கும் அமரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள படைக்கள உடன்படிக்கையால்(சோபா) இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமரிக்கா தெரிவித்துள்ளது.

அமரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் படையினருக்கு பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கப்படவுள்ளன.

இந்தநிலையில் உடன்படிக்கை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன.

இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. அவ்வாறு இறுதிப்படுத்தப்படு;ம் உடன்படிக்கை இணையத்தில் பிரசுரிக்கப்படும் என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்கர்களை சந்தித்தபோது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு சீனா தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க