உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

மோடி இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பார்….

இந்திய பிரதமராக நரேந்திர மோடி தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் விடயத்தி;ல் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் உள்ள மக்கள் இந்த எதி;ர்பார்ப்பை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண இந்த தடவை இந்திய பிரதமர் முயற்சிகளை மேற்கொள்வார் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸின் காலத்திலேதான் இலங்கையில் படுகொலைகள் இடம்பெற்றன.

2019 காலத்தில் காங்கிரஸினால் அதனை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

இந்தநிலையில் கடந்த ஐந்து வருடங்களில் நரேந்திர மோடியும் இலங்கை தமிழர் விடயத்தில் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனினும் இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் அந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மக்களை கோடிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க