உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஐஎஸ் தொடர்பு: 3 பிரான்ஸ் நாட்டவர்களுக்கு ஈராக்கில் மரணத் தண்டனை

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பை கொண்டிருந்த மூன்று பிரான்ஸ் பிரஜைகளுக்கு ஈராக்கிய நீதிமன்றம் மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
கேவின் கோனொட், லேனொட் லொப்பெஸ் மற்றும் சலிம் மக்கூ ஆகிய மூவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இந்த தண்டனைக்கு எதிராக இவர்கள் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யமுடியும்.
இதேவேளை இந்த மூவருடன் மேலும் 12 பிரான்ஸ் நாட்டவர்கள் கடந்த பெப்ரவரியில் சிரியாவில் இருந்து ஈராக்குக்கு அனுப்பப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க