உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மோடியின் செயலியை பரீட்சித்துள்ள பெசில்

இந்திய பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட (APP) என்ற செயலியை தமது பிரசாரத்துக்கு பயன்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுன எதிர்ப்பார்த்துள்ளது.

இந்த செயலியை மோடியின் நெருங்கிய அரசியல்வாதியான பாரதீய ஜனதாவின் அமித்ஷாவே இந்திய தேர்தல் பிரசாரத்தின்போது செயற்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
இந்திய பொதுத்தேர்தலின்போது மோடியின் பிரசாரத்துக்கு இந்த கணினி மென்பொருள் உதவியதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே பெசிலின் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அண்மையில் இடம்;பெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றின்போது இந்த செயலி பரீட்சித்துப்பார்க்கப்பட்டு;ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க