உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழர்கள் திமுக மீது இன்னும் சகப்புணர்வை கொண்டுள்ளனர்- சிவி விக்னேஸ்வரன

“இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் கசப்புணர்வும் இருந்து வருகிறது”

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தக்கருத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அனுப்பியுள்ள கடிதத்திலேயே விக்னேஸ்வரன் இதனைக்குறிப்பிட்டுள்ளார்

இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர், இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க