உள்நாட்டு செய்திகள்

அவசரகாலச் சட்டம் நீடிப்பு – கூட்டமைப்பு எதிர்ப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிராக வாக்களித்தனர்.

21/4 தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க