உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் குழு குறித்து மற்றுமொரு திடுக்கிடும் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்பைப் பேணினார் எனக் கூறப்படும் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார் எனத் தெரிவித்தே குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரியின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மற்றும் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளன எனப் பொலிஸார் கூறினர்.

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க