உள்நாட்டு செய்திகள்

21/4 தாக்குதல் – மியன்மாரிலும் ஒருவர் கைது

21/4 தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் நேற்று மாலை மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா விசாவைப் புதுப்பிப்பதற்காக யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு சென்றபோதை சிக்கியுள்ளார். ஒரு வருடத்துக்கு மேலாக அவர் மியன்மாரில் சட்டவிரோதமாக தங்கிவந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க