உள்நாட்டு செய்திகள்

‘ அரபு மொழியை அகற்றவும்’ – வருகிறது சுற்றுநிருபம்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு சுற்றுநிருபமொன்றை  வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே வீதி பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க