உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

ஹட்டன், கண்டி பேரூந்து சேவைகள் முடங்கின

ஹட்டனிலிருந்து கண்டிவரை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளும்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளும் இன்று சேவையில் ஈடுபடவில்லை.  இதனால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஹட்டனிலிருந்து கண்டிவரை போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகளை நாவலப்பிட்டிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் சாரதிகள் ஈடுபட்டனர்.

ஹட்டன் பேரூந்து நிலையத்துக்கு முன்னால் நடைபெற்ற இந்த போராட்டத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இ.போ.ச. ஊழியர்களும் இதில் கலந்துகொண்டனர்.

பத்தன நிருபர்

 

க.கிசாந்தன்

கருத்து தெரிவிக்க