உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் -வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர்  Damiano Sguaitamatti வடமாகாண ஆளுநர்  சுரேன் ராகவனை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano  மரியாதை நிமித்தம் ஆளுநரை சந்தித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

கருத்து தெரிவிக்க