உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

வீதி பெயர்ப் பலகையில் இனி சீன, அரபு மொழிகளுக்குத் தடை!

இலங்கையில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே வீதி பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜீர அபேவர்தனவுக்கே பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மூன்று மொழிகளையும்தவிர வேறு மொழிகளில் வீதிப்பலகைகளை காட்சிப்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க