இன்று (மார்ச் 06) டுபாய் மற்றும் சார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் சார்ஜாவிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்த 23 வயதுடைய ஆணொருவரும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 39,200 வெளிநாட்டு சிகரட்டுகளடங்கிய 196 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 12ம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க