உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: வற்றாப்பளையில் பிரதிபலிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களின் தாக்கத்தை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் நேற்று காணக்கூடியதாக இருந்தது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நிகழ்வில் இந்தமுறை அடியார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்காணப்பட்டது.

இராணுவம், காவல்துறை, முப்படைகளின் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் ஆலயத்திருவிழா நேற்று இடம்பெற்றது.


எனினும் ஆலயத்துக்கு வருகை தந்த அடியார்களின்; எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது.

வழமையாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உட்புறப் பகுதியிலேயே மிக நெருக்கமாக பக்தர்கள் தொகை இருப்பது வழக்கம்.

எனினும் நேற்று ஆலய வளாகம் அடியார்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கருத்து தெரிவிக்க