உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ள வெளிநாடுகளின் முஸ்லிம் அகதிகள் வவுனியா – பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று வவுனியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் அகதிகள் அடைக்கலம் கோரியிருந்தனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குலுக்கு பின்னர், இவர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கினர்

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு, விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இவர்கள் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க