உள்நாட்டு செய்திகள்

ரிஷாட்டுக்கு நேசக்கரம் நீட்டுகிறார் மனோ

”  ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தனது முகநூல் ஊடாக கருத்து பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ,

” ரிஷாட் எங்கள் அமைச்சரவை அமைச்சர். அவர் மீது எதிரணி கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் ஆதரிக்க முடியாது. அவர் குறித்து அமைச்சரவையில், எம் அரசாங்கத்தில்  கலந்துரையாடுவோம். ஆனால் அவரை அழிக்க எதிரிக்கட்சிக்கு துணை போக முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

.

கருத்து தெரிவிக்க