இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரசின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் ஆதரவு

நேற்று (அக்டோபர் 02) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை
சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மிசுகோஷி ஹிதேயாகி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க