இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு ,சிலாபம்,கற்பிட்டி ஆகிய கடற்பகுதிகளில் இரண்டு நாட்களாகக் கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 1,222 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய பீடி
இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு பாரவூர்தியொன்றும் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பீடி இலைகள் காவல்துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க