இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பில் கருத்து

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் திகதி குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் 15 நாட்களுக்குள் 2023 (2024) ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு 45,000க்கும் அதிகமான மாணவர்கள் உள்வாங்கப்படுவார்களென பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க